37 வருட கிடப்பிற்குப் பிறகு வெளியாகும் ரஜினிகாந்தின் ஹிந்திப் படம் | ஆஸ்கர் விருது : நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் |

டிரிப்பர் என்டர்டெயின்மென்ட் சார்பில் மதுசூதனன் தயாரித்திருக்கும் படம் பரோல். துவாரக் ராஜா இயக்கி உள்ளார். ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் உள்பட பலர் நடித்துள்ளனர். மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ்குமார் அமல் இசை அமைத்துள்ளார்.
படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் படம் பற்றி இயக்குனர் துவாரக் ராஜா கூறியதாவது: இந்த படம் ஒரு குடும்பத்தை பற்றிய கதை. குடும்பங்களில் நாம் பார்க்காத ஒரு பக்கத்தை பற்றிய கதை இது. அனைத்து நடிகர்களும் முழு அர்பணிப்புடன் நடித்து கொடுத்தனர். இந்த படத்தின் கதைக்களத்தில் ஆண்களால் ஏற்படும் பிரச்னையை, பெண்கள் தீர்ப்பதாய் இருக்கும். இந்த படத்தில் நடித்த பெண் கதாபாத்திரங்கள் அனைவரும் அந்த உணர்வுகளை சிறப்பாக கடத்தியுள்ளனர்.
தாய் இறந்த காரணத்தால், தனக்குப் பிடிக்காத அண்ணனை சிறையில் இருந்து பரோலில் எடுக்கிறான் தம்பி. அவனுக்கும், அவன் அண்ணனுக்கும் இடையிலுள்ள பிரச்னைகளும், அதைச்சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களும்தான் படம். படத்தின் கதை களம் வடசென்னை. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாக கூறி தணிக்கை குழுவில் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படம் வருகிற 11ம் தேதி வெளிவருகிறது. என்றார்.