ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு நடிகர் விஷால் நேற்று இலவச திருமணம் செய்து வைத்தார். 51 வகையான பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கினார். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத முறைப்படி திருமணங்கள் நடந்தன. விஷால் மக்கள் இயக்கத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
விழாவில் விஷால் பேசியதாவது: இன்று எனது குடும்பம் பெரிதாகி விட்டது. எனக்கு 11 தங்கைகள் கிடைத்திருக்கிறார்கள். தங்கை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த மணமகள்களை எனது தங்கை போல பார்க்கிறேன். தங்கைகளை நல்ல முறையில் மாப்பிள்ளைகள் கவனித்துக் கொள்ள வேண்டும். ஏதாவது பிரச்னை பண்ணினால் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வந்து நிற்பேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்தோம், போனோம் என்று இல்லாமல் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பேன். இந்த 11 தம்பதிகளின் குழந்தைகளின் கல்வி செலவை எனது தேவி அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும்.
மக்கள் நல இயக்கம் எந்த நோக்கமும் இல்லாமல் சமுதாய பணியாற்றி வருகிறது. நல்ல நோக்கம் இருப்பவ்கள் என்னுடன் வாருங்கள் என்று அழைக்கிறேன். பல கைகள் சேர்ந்தால்தான் நல்ல விஷயங்களை நடத்தி காட்ட முடியும். இவ்வாறு பேசினார் விஷால்.