'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஹாலிவுட் சினிமாவை இந்தியா நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவர் இயக்கிய பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்கள் உலக அளவில் வெற்றி பெற்று ஆயிரம் கோடிக்கு மேல் வசூலையும் குவித்தது. அடுத்து அவர் ஹாலிவுட் படம் இயக்க வாய்ப்பு வந்தபோதும் இந்திய படங்களை ஹாலிவுட்டுக்-கு கொண்டு செல்வதே என் இலக்கு என அறிவித்து தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். அடுத்து தனது கனவு படைப்பான மகாபாரத்தை 3 பாகங்களாக இயக்க இருக்கிறார்.
இந்த நிலையில் ராஜமவுலியுடன் ஹாலிவுட் நிறுவனம் ஒன்று கைகோர்த்திருக்கிறது. கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ் ஏஜென்சி (சிஏஏ) என்ற நிறுவனம் ஹாலிவுட் படங்களை உலகம் முழுக்க சந்தைப்படுத்தும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனம் ராஜமவுலியுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இனி ராஜமவுலி இயக்கும் படங்களை ஹாலிவுட் உள்ளிட்ட உலக சந்தைப்படுத்தும் பணியை இந்த நிறுவனம் செய்ய இருக்கிறது. மகேஷ் பாபு நடக்கும் படத்தில் இருந்து இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வருகிறது.