நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில் வாட்ச்மேன், கோமாளி, மன்மத லீலை போன்ற படங்களில் நடித்தவர் கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் தற்போது கன்னடத்தில் உருவாகி வரும் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஒரு சண்டை காட்சியில் நடித்தபோது சம்யுக்தா ஹெக்டேவின் காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருக்கிறார். தனது தந்தையுடன் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ள சம்யுக்தா ஹெக்டே, ஒரு பதிவும் போட்டு இருக்கிறார். அந்தப் பதிவில், இன்று காலையில் எழுந்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த இரண்டு தினங்களாக மிகவும் கடினமாக உணர்ந்தேன். ஆனால் என்னை என் குடும்பம் அருகில் இருந்து பாதுகாத்து வருவதால் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார் சம்யுக்தா ஹெக்டே.