ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் |
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 52வது கேரளா அரசு விருதுகளில் பூதகாலம் என்கிற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை ரேவதிக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் சதாசிவம் என்பவர் இயக்கிய இந்த படத்தில், கணவன் இல்லாமல் ஒற்றை ஆளாக தனது மகனை வளர்க்கும் தாயாக நடித்திருந்தார் ரேவதி.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் ரேவதி பெரும் முதல் கேரள அரசு விருது இதுதான் கடந்த 1983-ல் மலையாளத்தில் கட்டத்தே கூடு என்கிற படத்தில் அறிமுகமான அதே சமயத்தில்தான் தமிழில் மண்வாசனை என்கிற படத்திலும் அறிமுகமானார் ரேவதி. இத்தனை வருட திரையுலக பயணத்தில் மூன்று தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ள ரேவதிக்கு தனது சிறந்த நடிப்பிற்காக முதல்முறையாக தனது சொந்த ஊரான கேரளாவில், கேரள அரசு விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறும்போது, ஏதோ ஒருவகையில் தேர்வு குழுவினர் அனைவரின் கவனத்தையும் எனது நடிப்பு கவர்ந்திழுத்து இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் இந்த படத்தின் இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.