மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

நீண்டநாட்களாக காதலர்களாக வலம் வருகின்றனர் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும். இவர்கள் எப்போது திருமணம் செய்வார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. இருப்பினும் தற்போது இருவரும் திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. காத்துவாக்குல ரெண்டு காதல் படம் கடந்தவாரம் வெளியானது. அந்த சமயத்தில் திருப்பதி சென்று இருவரும் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து ஷீரடிக்கு சென்றும் வழிபட்டனர்.
இந்நிலையில் ஒருவாரத்திற்குள் மீண்டும் இரண்டாவது முறையாக இன்று(மே 7) விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி திருப்பதியில் வழிபாடு நடத்தி உள்ளனர். இதை வைத்து இவர்கள் திருமணத்திற்கு தயாராகி வருவதாக சினி உலகில் தகவல் பரவி வருகிறது. அதாவது ஜூன் 9ல் இவர்களுக்கு திருமணம் என்றும், அதற்கான பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி நயன்தாராவின் மக்கள் தொடர்பாளரை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது அவர் கூறியதாவது : ‛‛காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரிலீஸாவதற்கு முன்பும், பின்பும் இருவரும் சென்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். மற்றபடி திருமணம் பற்றிய எந்த தகவலும் உறுதியாகவில்லை'' என்றார்.
அதேசமயம் இவர்கள் விரைவில் திருமணம் செய்ய போவதாக திரையுலகினர் பேசி வருகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட இருவரும் வாய் திறந்தால் மட்டுமே திருமணம் எப்போது என்பது தெரிய வரும்.




