ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை | 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி |

நீண்டநாட்களாக காதலர்களாக வலம் வருகின்றனர் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும். இவர்கள் எப்போது திருமணம் செய்வார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. இருப்பினும் தற்போது இருவரும் திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. காத்துவாக்குல ரெண்டு காதல் படம் கடந்தவாரம் வெளியானது. அந்த சமயத்தில் திருப்பதி சென்று இருவரும் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து ஷீரடிக்கு சென்றும் வழிபட்டனர்.
இந்நிலையில் ஒருவாரத்திற்குள் மீண்டும் இரண்டாவது முறையாக இன்று(மே 7) விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி திருப்பதியில் வழிபாடு நடத்தி உள்ளனர். இதை வைத்து இவர்கள் திருமணத்திற்கு தயாராகி வருவதாக சினி உலகில் தகவல் பரவி வருகிறது. அதாவது ஜூன் 9ல் இவர்களுக்கு திருமணம் என்றும், அதற்கான பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி நயன்தாராவின் மக்கள் தொடர்பாளரை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது அவர் கூறியதாவது : ‛‛காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரிலீஸாவதற்கு முன்பும், பின்பும் இருவரும் சென்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். மற்றபடி திருமணம் பற்றிய எந்த தகவலும் உறுதியாகவில்லை'' என்றார்.
அதேசமயம் இவர்கள் விரைவில் திருமணம் செய்ய போவதாக திரையுலகினர் பேசி வருகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட இருவரும் வாய் திறந்தால் மட்டுமே திருமணம் எப்போது என்பது தெரிய வரும்.