மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
நீண்டநாட்களாக காதலர்களாக வலம் வருகின்றனர் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும். இவர்கள் எப்போது திருமணம் செய்வார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. இருப்பினும் தற்போது இருவரும் திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. காத்துவாக்குல ரெண்டு காதல் படம் கடந்தவாரம் வெளியானது. அந்த சமயத்தில் திருப்பதி சென்று இருவரும் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து ஷீரடிக்கு சென்றும் வழிபட்டனர்.
இந்நிலையில் ஒருவாரத்திற்குள் மீண்டும் இரண்டாவது முறையாக இன்று(மே 7) விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி திருப்பதியில் வழிபாடு நடத்தி உள்ளனர். இதை வைத்து இவர்கள் திருமணத்திற்கு தயாராகி வருவதாக சினி உலகில் தகவல் பரவி வருகிறது. அதாவது ஜூன் 9ல் இவர்களுக்கு திருமணம் என்றும், அதற்கான பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி நயன்தாராவின் மக்கள் தொடர்பாளரை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது அவர் கூறியதாவது : ‛‛காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரிலீஸாவதற்கு முன்பும், பின்பும் இருவரும் சென்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். மற்றபடி திருமணம் பற்றிய எந்த தகவலும் உறுதியாகவில்லை'' என்றார்.
அதேசமயம் இவர்கள் விரைவில் திருமணம் செய்ய போவதாக திரையுலகினர் பேசி வருகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட இருவரும் வாய் திறந்தால் மட்டுமே திருமணம் எப்போது என்பது தெரிய வரும்.