நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
2017-ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. தமிழில் '100% காதல்', 'கொரில்லா', 'சைலன்ஸ்' போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக 'ஜெயேஸ்பாய் ஜோர்தார்' என்ற ஹிந்தி படத்தில் ஷாலினி பாண்டே நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், ஷாலினி பாண்டே பேசும்போது, “நான் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பது எனது தந்தையின் விருப்பம். நானும் அவருக்காக படிக்கத் தொடங்கினேன். ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு அது பிடிக்கவில்லை. எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. இதற்காக வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டேன். மனதுக்கு கஷ்டம் தான். ஆனால் இப்போது பெற்றோர்கள் என்னை பெருமையாக நினைப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார் .