என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. நேற்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் சமந்தாவும் நடித்த 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் நேற்று தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இன்று சமந்தா ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூகவலைதளத்தில் பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் நயன்தாரா பற்றி சில வார்த்தைகள் எனக் கேட்டதற்கு சமந்தா, “நயன்தாரா நயன்தாராதான், அவரைப் போல வேறு ஒருவர் கிடையாது. அவர் உண்மையானவர், மிகவும் விசுவாசமானவர், நான் சந்தித்தவர்களில் மிகவும் கடின உழைப்பாளி,” என பாராட்டு தெரிவித்துள்ளார்.
நயன்தாரா, சமந்தா முதல் முறையாக இந்தப் படத்தில்தான் இணைந்து நடித்துள்ளனர். சமந்தா நடித்து அடுத்து 'சாகுந்தலம்' திரைப்படம் தெலுங்கில் வெளியாக உள்ளது. 'யசோதா' என்ற தெலுங்குப் படத்திலும், விஜய் தேவரகொன்டா ஜோடியாக மற்றொரு தெலுங்குப் படத்திலும் சமந்தா நடித்து வருகிறார்.