டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். அதோடு பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு சமீப காலமாக சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அதன் காரணமாக யூடியூப் சேனல்களில் நடிகர்கள் குறித்த அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு வருகிறார். இப்படி அனைத்து நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் குறித்து அவதூறு செய்திகளை வெளியிட்டு வருவதால் அவர் மீது சினிமா உலகினர் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.
சில நடிகைகள் அவரை தொடர்புகொண்டு அவருடன் மோதலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து சினிமாத்துறையினர் குறித்த சர்ச்சை செய்திகளை அவர் வெளியிட்டு வருவதால் அவருக்கு எதிராக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் திவ்யா என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தொடர்ந்து சினிமா நடிகர் நடிகைகள் குறித்த அவதூறு செய்திகளை சோசியல் மீடியாவில் வெளியிட்டுவரும் பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த புகார் சம்பந்தமாக பயில்வான் ரங்கநாதன் கைதாகிறாரா? இல்லை இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடுவதற்கு அவருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.




