தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். அதோடு பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு சமீப காலமாக சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அதன் காரணமாக யூடியூப் சேனல்களில் நடிகர்கள் குறித்த அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு வருகிறார். இப்படி அனைத்து நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் குறித்து அவதூறு செய்திகளை வெளியிட்டு வருவதால் அவர் மீது சினிமா உலகினர் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.
சில நடிகைகள் அவரை தொடர்புகொண்டு அவருடன் மோதலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து சினிமாத்துறையினர் குறித்த சர்ச்சை செய்திகளை அவர் வெளியிட்டு வருவதால் அவருக்கு எதிராக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் திவ்யா என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தொடர்ந்து சினிமா நடிகர் நடிகைகள் குறித்த அவதூறு செய்திகளை சோசியல் மீடியாவில் வெளியிட்டுவரும் பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த புகார் சம்பந்தமாக பயில்வான் ரங்கநாதன் கைதாகிறாரா? இல்லை இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடுவதற்கு அவருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.