‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
'பான்-இந்தியா' என்ற பரபரப்பு 'பாகுபலி 2' படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் பிரபலமானது. அந்தப் படத்தில் நாயகனாக நடித்த பிரபாஸ் அதன் மூலம் பான்--இந்தியா ஹீரோவானார். அதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ' ஹிந்தியில் மட்டுமே ஓடியது. சமீபத்தில் வெளிவந்த 'ராதேஷ்யாம்' நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே பெற்றது. இருப்பினும் அடுத்தடுத்து நான்கைந்து பான்--இந்தியா படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.
தெலுங்கில் தயாராகி கடந்த வருடம் டிசம்பரில் வெளிவந்த 'புஷ்பா' படமும் பான்--இந்தியா படமாக வெளியாகியது. எதிர்பார்ப்பையும் மீறி அப்படம் ஹிந்தியிலும் மற்ற மொழிகளிலும் நல்ல வசூலைப் பெற்றது. அப்படத்தின் மூலம் நாயகனாக நடித்த அல்லு அர்ஜுன் பான்--இந்தியா ஹீரோவானார்.
இப்போது அந்த வரிசையில் இன்னும் இரண்டு ஹீரோக்கள் சேர்ந்துள்ளனர். ராஜமௌலி இயக்கத்தில் நேற்று வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் முதல் நாளிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுவிட்டது. அப்படத்தில் நடித்த ராம்சரண், ஜுனியர் என்டிஆர் இருவருமே இப்போது பான்--ஹீரோக்கள் ஆகிவிட்டனர்.
பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம்சரண், ஜுனியர் என்டிஆர் ஆகியோரைத் தொடர்ந்து அடுத்த பான்--இந்தியா ஹீரோ வரிசையில் காத்திருப்பவர் விஜய் தேவரகொன்டா. அவர் நடித்து வரும் 'லிகர்' படம் பான்--இந்தியா படமாக வெளிவர உள்ளது. அதற்குள் தெலுங்கில் வேறு யாராவது பான்--இந்தியா ஹீரோவாக மாறுவார்களா என்பது தெரியவில்லை.
இருப்பினும் ஏப்ரல் 13 அன்று வெளியாக உள்ள 'பீஸ்ட்' படம் பான்--இந்தியா படமாக வெளிவருவதால் விஜய், பான்--இந்தியா ஹீரேவாக உயர்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏப்ரல் 14ல் வெளியாக உள்ள கன்னடப் படமான 'கேஜிஎப் 2' மூலம் தன்னுடைய பான்--இந்தியா அந்தஸ்தை யாஷ் இன்னும் உயர்த்திக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.