என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் ராதே ஷ்யாம் படம் வெளியானது. பாகுபலி படத்திற்கு பிறகு வெளியான சாஹோ திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில், ராதே ஷ்யாம் மூலம் அதை பிரபாஸ் அதை ஈடு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற தவறியுள்ளது. இதற்கு அடுத்ததாக பிரசாந்த் நீல் டைரக்ஷனில் நடித்து வரும் சலார் படத்தை பிரபாஸ் ரொம்பவே எதிர்பார்க்கிறார்.
இந்த நிலையில் சலார் படத்தின் படப்பிடிப்பின்போது பிரபாஸுக்கு சில காயங்கள் ஏற்பட்டன. தற்போது இதற்காக ஒரு மைனர் சர்ஜரி செய்ய வேண்டி இருப்பதால் ஸ்பெயின் நாட்டுக்கு கிளம்புகிறார் பிரபாஸ். இந்த தகவலைக் கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் மைனர் சர்ஜரி முடிந்து அவர் விரைவில் குணமாகி திரும்ப வேண்டுமென சோசியல் மீடியாவில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.