மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சவுந்தர்ராஜா | அரசு பள்ளிகளில் மாதம் ஒரு சினிமா: தமிழக அரசு முடிவு | பார்த்திபன் படத்திற்கு விருது | நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு நற்சான்றிதழ் | கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் | இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு | ஜுலை 8ம் தேதி 9 படங்கள் ரிலீஸ் | இளைஞர்களை உசுப்பேற்றும் லீசா எக்லேர்ஸ்! வைரல் ரீல்ஸ் வீடியோ | முன்னாள் கணவருக்கு காஜல் பசுபதி பிறந்தநாள் வாழ்த்து! | நீண்ட நாட்களுக்கு பின் வெளியான சாண்ட்ராவின் புகைப்படம்! |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சமந்தா என பலர் நடிப்பில் உருவான படம் புஷ்பா தி ரைஸ். இந்த படம் தெலுங்கில் மட்டுமின்றி வட இந்தியாவிலும் வசூலைக் குவித்திருக்கிறது. அந்த வகையில் புஷ்பா இப்போது உலக அளவில் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இது இந்த கோவிட் காலத்தில் வியக்க வைக்கும் சாதனையாகும். குறிப்பாக ஹிந்தி வட்டாரத்தில் இப்படம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது புஷ்பாவின் ஹிந்தி பதிப்பு ரூ. 57 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதோடு ஒரு நாள் வசூலில் இந்த படம் 6.10 கோடிகளை வசூலித்து இன்னொரு சாதனையையும் செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த புஷ்பா படம் ஹிந்தி மார்க்கெட்டில் ரூபாய் 75 கோடி வரி வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வசூலித்தால் ஹிந்தி டப்பிங் மார்க்கெட்டில் அதிகப்படியாக வசூல் செய்த படம் என்ற பட்டியலிலும் புஷ்பா இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.