எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' | சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சமந்தா என பலர் நடிப்பில் உருவான படம் புஷ்பா தி ரைஸ். இந்த படம் தெலுங்கில் மட்டுமின்றி வட இந்தியாவிலும் வசூலைக் குவித்திருக்கிறது. அந்த வகையில் புஷ்பா இப்போது உலக அளவில் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இது இந்த கோவிட் காலத்தில் வியக்க வைக்கும் சாதனையாகும். குறிப்பாக ஹிந்தி வட்டாரத்தில் இப்படம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது புஷ்பாவின் ஹிந்தி பதிப்பு ரூ. 57 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதோடு ஒரு நாள் வசூலில் இந்த படம் 6.10 கோடிகளை வசூலித்து இன்னொரு சாதனையையும் செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த புஷ்பா படம் ஹிந்தி மார்க்கெட்டில் ரூபாய் 75 கோடி வரி வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வசூலித்தால் ஹிந்தி டப்பிங் மார்க்கெட்டில் அதிகப்படியாக வசூல் செய்த படம் என்ற பட்டியலிலும் புஷ்பா இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.




