மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சமந்தா என பலர் நடிப்பில் உருவான படம் புஷ்பா தி ரைஸ். இந்த படம் தெலுங்கில் மட்டுமின்றி வட இந்தியாவிலும் வசூலைக் குவித்திருக்கிறது. அந்த வகையில் புஷ்பா இப்போது உலக அளவில் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இது இந்த கோவிட் காலத்தில் வியக்க வைக்கும் சாதனையாகும். குறிப்பாக ஹிந்தி வட்டாரத்தில் இப்படம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது புஷ்பாவின் ஹிந்தி பதிப்பு ரூ. 57 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதோடு ஒரு நாள் வசூலில் இந்த படம் 6.10 கோடிகளை வசூலித்து இன்னொரு சாதனையையும் செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த புஷ்பா படம் ஹிந்தி மார்க்கெட்டில் ரூபாய் 75 கோடி வரி வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வசூலித்தால் ஹிந்தி டப்பிங் மார்க்கெட்டில் அதிகப்படியாக வசூல் செய்த படம் என்ற பட்டியலிலும் புஷ்பா இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.




