விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலியின் கனவு திரைப்படம் மகாபாரதம். இந்த படத்தை அவர் 2500 கோடி செலவில் இந்திய மொழிகள் மட்டுமல்லாது உலக மொழிகளிலும் 3 பாகங்களாக இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் இந்த தகவல் குறித்து ராஜமவுலி இதுவரை கருத்து எதையும் கூறவில்லை. தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோசனுக்காக மீடியாக்களை சந்தித்து வரும் ராஜமவுலி, மாகாபாரதம் இயக்குவதை உறுதி செய்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அடுத்து 10 ஆண்டுகளுக்குள் மகாபாரத்தின் பணிகள் தொடங்க வாய்ப்பிருக்கிறது. இப்போது உருவாகி உள்ள ஆர்ஆர்ஆர் படத்தில்கூட மகாபாரத்தின் தாக்கம் இருக்கும். மகாபாரதம் தயாராகும்போது அதில் ராம்சரணுக்கும், ஜூனியர் என்டிஆருக்கும்கூட பொருத்தமான கேரக்டர்கள் இருக்கிறது. இந்தியாவின் முன்னணி நடிகர்கள் ஒருங்கிணையும் படமாக கூட அது அமையலாம் என்றார்.