பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
நயன்தாரா-விக்னேஷ்சிவனின் ரவுடி பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள படம் ராக்கி. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்தின் புரோமோவில் ரத்தம் சொட்டும் வகையிலான ஒரு கெட்டப்பில் நயன்தாராவும் நடித்திருந்தார். இந்த படத்தில் வசந்த்ரவி, பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 23ந் தேதி வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ராக்கி படத்தை பார்த்த ரஜினிகாந்த், இயக்குனர் பாரதிராஜா, நடிகர் வசந்த் ரவி ஆகியோரை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பாராட்டியிருக்கிறார். அதையடுத்து ராக்கி படத்தை வெளியிட்டுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியிருக்கிறார்.
அதுகுறித்து விக்னேஷ்சிவன் தெரிவிக்கையில், இன்று தலைவர் ரஜினி அவர்களிடமிருந்து தொலைபேசி வந்தது. நயன்தாராவுக்கும் எனக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தலைவர் சொன்ன மனஉறுதியை வார்த்தைகளால் விளக்க முடியாது, என்று அவர் தெரிவித்துள்ளார்.