'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

ஓடிடியில் இந்த ஆண்டு தன்னுடைய அடுத்தடுத்த இரண்டு படங்கள் மூலம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் ஆர்யா. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'டெடி' படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஓடிடி தளத்தில் வெளிவந்து சிறியவர்களையும் அதிகம் கவர்ந்தது. அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'சார்பட்டா பரம்பரை' படம் ஜுலை மாதம் வெளியாகி அதுவும் நல்லதொரு விமர்சனத்தைப் பெற்றது.
கடந்த வாரம் ஆர்யா நடித்து தியேட்டர்களில் வெளிவந்த 'அரண்மனை 3' படமும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்துவிட்டது. இந்த வருடம் ஆர்யா நடித்து வெளிவந்த மூன்று படங்களுமே அவருடைய மார்க்கெட் உயரக் காரணமாக அமைந்துவிட்டது.
தன்னுடைய அடுத்த படமாக 'டெடி' படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தை ஆர்யா ஆரம்பித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்ய லெட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். சிம்ரன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது.
இயக்குனர் சக்தி சவுந்திரராசன் கூறுகையில், ‛‛இப்படம் எல்லா ரசிகர்களையும், ஈர்க்கும்படி இருக்கும். தமிழுக்கு முற்றிலும் புதுமையான கதையாக இப்படம் இருக்கும். திரையுலகின் அரிதான முத்து ஆர்யா. இப்படம் ஆர்யாவுக்கு சிறப்பான படமாக இருக்கும். இதுவரை அவர் நடித்திராத பாத்திரத்தில் நடிக்கிறார்,'' என்றார்.




