300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
மலையாள திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் கோபி சுந்தர். தமிழில் தோழா, பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது கோபி சுந்தர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் மலையாள திரையுலகில் பரபரப்பையும் ரசிகர்களிடம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோபி சுந்தர் பின்னணி பாடகி அம்ரிதா சுரேஷுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் தான் அது.
இந்த அம்ரிதா சுரேஷ், இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகருமான பாலாவின் முன்னாள் மனைவி ஆவார். 2010ல் ஒரு ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட அவருக்கும், நடுவராக கலந்துகொண்ட பாலாவுக்கும் காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து அந்த இருவருக்கும் கடந்த வருடம் தான் விவாகரத்து ஆனது.
அதேபோல ஏற்கனவே பிரியா என்பவருடன் திருமணம் ஆன கோபி சுந்தர் 2010ல் அவரிடமிருந்து பிரிந்து விவாகரத்துக்கு விண்ணப்பித்து விட்டு அதன்பிறகு கடந்த எட்டு வருடங்களாக பின்னணி பாடகியான அபயா ஹிரன்மயி என்பவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்க்கை நடத்தி வந்தார். இந்த நிலையில்தான் தற்போது அம்ரிதா சுரேஷுடன் மிக நெருக்கமாக அவர் எடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படமும் அதுகுறித்து அவர் கூறியுள்ள வார்த்தைகளும் இவர்களுக்குள் புதிய உறவு மலர்ந்துள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறது. கோபி சுந்தருக்கு நெருக்கமான சில நண்பர்கள் இந்த புதிய உறவை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.