முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு | திரையரங்குகளுக்கு ஜாக்பாட்... இனி 5 காட்சி திரையிடலாம் : முதல்வர் விஜய் உத்தரவு | 'ஆனந்தம்' 25 வருடங்கள் : இயக்குனர் லிங்குசாமி நன்றி | நடிகர் தர்மேந்திராவுக்கு 'பத்ம விபூஷன்' விருது: மனைவி ஹேமமாலினி பெற்றார் | இயக்குனர் சேரனின் தாயார் காலமானார் | கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா ராய் | கார்த்தி 30 துவங்கியது | மராத்தி படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'ராஜா சிவாஜி' | இந்த முறையாவது சொன்ன தேதியில் ஜனநாயகன் வருமா? | கேரள கவர்னரிடமிருந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற மம்முட்டி |

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான படம் த்ரிஷ்யம்-2. முதல் பாகத்தை போலவே இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது. தெலுங்கில் த்ரிஷயம் படத்தை ரீமேக் செய்து வெற்றியை ருசித்த நடிகர் வெங்கடேஷ் உடனடியாக த்ரிஷ்யம்-2 ரீமேக்கையும் துவங்கி முடித்து விட்டார். துல்லியமான வெற்றியை சொல்லி அடிப்பதற்காக முதல் பாகத்தை இயக்கிய நடிகை ஸ்ரீபிரியாவை ஒதுக்கிவிட்டு இயக்குனர் ஜீத்து ஜோசப்பையே இந்தப்படத்தை இயக்கவும் வைத்துவிட்டார்.
ஆனால் படம் தயாராகி சில மாதங்கள் ஆனாலும் கூட ரிலீசில் தாமதம் ஆகிக்கொண்டே வந்தது. இந்தநிலையில் வரும் நவ-25ம் தேதி அமேசன் பிரைமில் நேரடியாக வெளியாகிறது த்ரிஷ்யம்-2. ஆனால் அமேசான் பிரைமுக்கு முன்னதாக இந்தப்படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக ஒப்பந்தம் செய்திருந்தாராம் தயாரிப்பாளர் சுரேஷ்பாபு.
ஆனால் தற்போது திடீரென அமேசான் பிரைமுடன் புதிய ஒப்பந்தம் போட்டு படத்தை வெளியிடுவதாக அறிவித்துவிட்டார். இதற்காக ஹாட்ஸ்டாருடன் போட்ட ஒப்பந்தத்தை கூட கேன்சல் செய்யாமல் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹாட்ஸ்டார் நிறுவனம் இது தொடர்பாக அவர்மீது புகார் அளித்து வழக்கு தொடரும் வேலைகளில் இறங்கியுள்ளதாம்.




