
10 வருடம் கழித்து தமிழுக்கு வந்த ரீமா கல்லிங்கல்
ஸ்டண்ட் இயக்குனரான ஸ்டண்ட் சில்வா முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகியுள்ள இந்தப்படத்தில் சமுத்திரக்கனி, சாய்பல்லவியின் தங்கையான பூஜா கண்ணன் ஆகியோருடன் ரீமா கல்லிங்கலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதில் நடித்தது பற்றி கூறும்போது, “இதில் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். ஸ்டண்ட் இயக்குனர் இயக்கும் படம் என்பதால் நாலு குத்துகளை விட்டு, பதிலுக்கு நாலு உதைகளை வாங்க வேண்டி இருக்குமோ என நினைத்தேன்.. ஆனால் முற்றிலும் மாறுபட்ட மென்மையான படமாக இதை உருவாக்கியுள்ளார்” என கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!