
நாகார்ஜூனா கோபம்
ஜன 28, 2022
Advertisement
நாகசைதன்யா - சமந்தா பிரிந்து விட்டனர். இவர்கள் பிரிவுக்கு பல்வேறு விதமான காரணங்கள் சமூகவலைதளங்களில் றெக்க கட்டி பறந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இவர்கள் பிரிவு பற்றி நடிகர் நாகார்ஜூனா கூறியதாக ஒரு கருத்து உலா வருகிறது. அதாவது, ‛‛நடிகை சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டதாகவும், இதை கேட்டு தனது மகன் மிகவும் வருந்தினார்"" என்று அவர் கூறியதாக செய்தி பரவியது. ஆனால் இதை நாகார்ஜூனா மறுத்துள்ளார்.
நாகார்ஜூனா கூறுகையில், ‛சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றிய எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது; முட்டாள்தனமானது. வதந்திகளை செய்தியாக வெளியிடுவதை தவிர்க்குமாறு ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்" எனக்கூறியுள்ளார்.
நாகார்ஜூனா கூறுகையில், ‛சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றிய எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது; முட்டாள்தனமானது. வதந்திகளை செய்தியாக வெளியிடுவதை தவிர்க்குமாறு ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்" எனக்கூறியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!