
அரண்மனை- 3- அப்டேட் கொடுத்த குஷ்பு
ஜன 30, 2021
Advertisement
சுந்தர்.சி தற்போது இயக்கி வரும் படம் அரண்மனை-3. இந்த படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராசிகண்ணா, சாக்ஷிஅகர்வால், விவேக், யோகிபாபு என பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், இப்படம் குறித்த ஒரு சூப்பர் அப்டேட்டை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் குஷ்பு. அரண்மனை-3 படத்தில் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடியிருப்பதோடு, அந்த பாடலுக்கு அவர்களே நடித்துள்ளனர். அவர்கள் இருவரையும் நடிகர்களாக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்வதாகவும், நடிப்பதற்கு ஒத்துக்கொண்ட அவர்கள் இருவருக்கும் நன்றி எனவும் பதிவிட்டுள்ளார் குஷ்பு.
இந்தநிலையில், இப்படம் குறித்த ஒரு சூப்பர் அப்டேட்டை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் குஷ்பு. அரண்மனை-3 படத்தில் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடியிருப்பதோடு, அந்த பாடலுக்கு அவர்களே நடித்துள்ளனர். அவர்கள் இருவரையும் நடிகர்களாக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்வதாகவும், நடிப்பதற்கு ஒத்துக்கொண்ட அவர்கள் இருவருக்கும் நன்றி எனவும் பதிவிட்டுள்ளார் குஷ்பு.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!