
நாகர்கோவில், நாய்க்குட்டி, படப்பிடிப்பு..... மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்....
நவ 29, 2022
Advertisement
சினிமா பிரபலங்களுக்கு வளர்ப்புப் பிராணிகள் மீது எப்போதுமே கொள்ளைப் பிரியம் இருக்கும். அதிலும் பல நடிகைகள் நாய்களை வளர்ப்பதில் தனி ஆர்வத்துடன் இருப்பார்கள். சிலர் பூனைகளையும் வளர்த்து வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது செல்ல நாய்க்குட்டியான "நைக்" உடன் நாகர்கோவிலில் கொஞ்சி விளையாடி மகிழ்ந்திருக்கிறார். “இன்னும் அறிவிக்கப்படாத ஒரு படத்திற்காக, அதிக மகிழ்ச்சி, நினைவுகள் ஆகியவற்றுடன் நாகர்கோவிலில் ஒரு வாரம்” எனப் பதிவிட்டு தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படங்கள், நாயுடன் விளையாடி மகிழும் வீடியோக்கள் ஆகியவற்றைப் பதிவிட்டுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்னதாக தனது குடும்பத்தினருடன் திருநெல்வேலி அருகில் உள்ள திருக்குறுங்குடி கிராமத்தில் அவர்களது பூர்வீக வீட்டிற்குச் சென்றது, குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபட்டது பற்றி கீர்த்தி பதிவிட்டிருந்தார். கீர்த்தியின் அம்மா நடிகை மேனகா நாகர்கோவிலை சொந்த ஊராகக் கொண்டவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது செல்ல நாய்க்குட்டியான "நைக்" உடன் நாகர்கோவிலில் கொஞ்சி விளையாடி மகிழ்ந்திருக்கிறார். “இன்னும் அறிவிக்கப்படாத ஒரு படத்திற்காக, அதிக மகிழ்ச்சி, நினைவுகள் ஆகியவற்றுடன் நாகர்கோவிலில் ஒரு வாரம்” எனப் பதிவிட்டு தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படங்கள், நாயுடன் விளையாடி மகிழும் வீடியோக்கள் ஆகியவற்றைப் பதிவிட்டுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்னதாக தனது குடும்பத்தினருடன் திருநெல்வேலி அருகில் உள்ள திருக்குறுங்குடி கிராமத்தில் அவர்களது பூர்வீக வீட்டிற்குச் சென்றது, குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபட்டது பற்றி கீர்த்தி பதிவிட்டிருந்தார். கீர்த்தியின் அம்மா நடிகை மேனகா நாகர்கோவிலை சொந்த ஊராகக் கொண்டவர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!