
பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள்
படத்தை திரும்ப திரும்ப பார்த்த ரசிகர்கள். லலிதா பத்மினியின் நாட்டிய நாடகம் முடிந்த பிறகு தியேட்டரை விட்டு வெளியேறிய சம்பவங்களும் உண்டு. இந்த நாட்டிய நாடகத்திற்கு அன்றைய பிரபல டான்ஸ் மாஸ்டரான தாரா சவுத்ரி நடனம் அமைத்திருந்தார். எல்.எஸ்.ராமசந்திரன் இயக்கி இருந்தார். படத்தில் விஷூவல் எபெக்ட் காட்சிகளை மார்டன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் இயக்கி இருந்தார். ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார். பி.எஸ்.கோவிந்தன் நாயகியாகவும், எஸ்.வரலட்சுமி நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.
லலிதா - பத்மினியின் "வள்ளி திருமணம்" நடனம் இடம்பெற்ற படம் என்றே விளம்பரமும் செய்தார்கள். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு லலிதா மலையாளத்திலும், பத்மினி தமிழிலும் ஹீரோயின் ஆனார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!