
பிளாஷ்பேக்: சுதந்திரத்திற்கு முன்பே அதை கொண்டாடிய படம்
மார் 17, 2025
Advertisement
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அதாவது 1947ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளியான படம் நாம் இருவர். இந்த படத்தை ஏவி.மெய்யப்ப செட்டியார் தயாரித்து, இயக்கினார். இவர் இயக்கிய கடைசி படமும் இதுதான். இந்த படத்தின் பெரிய வெற்றியால் தனது ஸ்டூடியோவை காரைக்குடியில் இருந்து சென்னைக்கு மாற்றினார்.
இந்திய சுதந்திரம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கிய நேரத்தில் நாட்டுப்பற்று உணர்ச்சிமிக்க கதையைத் தேடிக்கொண்டிருந்தார் மெய்யப்ப செட்டியார். என்.எஸ்.கிருஷ்ணனின் நாடகக் குழுவினர் நடத்தி வந்த "தியாக உள்ளம்" என்ற நாடகம் அவரின் கவனத்தைக் கவர்ந்தது. எனவே அந்த நாடகத்தின் உரிமையை வாங்கி "நாம் இருவர் " என்ற பெயரில் படமாக்க முடிவு செய்தார். நாடகத்தில் நாயகனாக நாடகத்தில் நடித்த எஸ்.வி.சகஸ்ரநாமத்தையே படத்திலும் நாயகனாக்க ஒப்பந்தம் செய்தார்.
அந்த நேரத்தில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கிருஷ்ணன் சிக்கியிருந்ததால் அவரின் நாடகக்குழுவை ஏற்று நடத்தும் முழு பொறுப்பும் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் தோளில் விழுந்தது. இதனால் நாம் இருவர் படத்தில் அவர் நடிக்க இயலவில்லை. நிலமையை உணர்ந்த ஏ.வி. மெய்யப்ப செட்டியார், டி.ஆர்.மகாலிங்கத்தை படத்தில் நாயகனாக்கினார். நாயகியாக டி.ஏ.ஜெயலட்சுமி நடித்தார்.
இவர்களுடன் பி.ஆர்.பந்துலு, கே.சாரங்கபாணி பேபி கமலா, டி.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆர்.சுதர்சன் இசை அமதை்து இருந்தார் . தேசபக்தி மிகுந்த பாரதியாரின் பாடல்கள் இந்த படத்தில் இடம் பெற்றது.
பெரும் பணக்காரர் ஒருவரின் மகன் திரைப்பட தயாரிப்பில் இறங்கி பெரும் கடனில் சிக்கி பின்பு அதிலிருந்து மீண்டு கடைசியில் காந்தியவாதி ஆவது மாதிரியான கதை. பாரதியார் விழாவுடன் தொடங்கும் படம் காந்தியின் பிறந்த நாளுடன் முடியும், பாரதியாரின் எழுச்சி மிகுந்த பாடல்கள், தேசப்பற்று மிக்க உரையாடல்கள் மூலம் சுதந்ததிரமடைவதற்கு முன்பே சுதந்திரத்தை கொண்டாடிய படம்.
இந்திய சுதந்திரம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கிய நேரத்தில் நாட்டுப்பற்று உணர்ச்சிமிக்க கதையைத் தேடிக்கொண்டிருந்தார் மெய்யப்ப செட்டியார். என்.எஸ்.கிருஷ்ணனின் நாடகக் குழுவினர் நடத்தி வந்த "தியாக உள்ளம்" என்ற நாடகம் அவரின் கவனத்தைக் கவர்ந்தது. எனவே அந்த நாடகத்தின் உரிமையை வாங்கி "நாம் இருவர் " என்ற பெயரில் படமாக்க முடிவு செய்தார். நாடகத்தில் நாயகனாக நாடகத்தில் நடித்த எஸ்.வி.சகஸ்ரநாமத்தையே படத்திலும் நாயகனாக்க ஒப்பந்தம் செய்தார்.
அந்த நேரத்தில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கிருஷ்ணன் சிக்கியிருந்ததால் அவரின் நாடகக்குழுவை ஏற்று நடத்தும் முழு பொறுப்பும் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் தோளில் விழுந்தது. இதனால் நாம் இருவர் படத்தில் அவர் நடிக்க இயலவில்லை. நிலமையை உணர்ந்த ஏ.வி. மெய்யப்ப செட்டியார், டி.ஆர்.மகாலிங்கத்தை படத்தில் நாயகனாக்கினார். நாயகியாக டி.ஏ.ஜெயலட்சுமி நடித்தார்.
இவர்களுடன் பி.ஆர்.பந்துலு, கே.சாரங்கபாணி பேபி கமலா, டி.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆர்.சுதர்சன் இசை அமதை்து இருந்தார் . தேசபக்தி மிகுந்த பாரதியாரின் பாடல்கள் இந்த படத்தில் இடம் பெற்றது.
பெரும் பணக்காரர் ஒருவரின் மகன் திரைப்பட தயாரிப்பில் இறங்கி பெரும் கடனில் சிக்கி பின்பு அதிலிருந்து மீண்டு கடைசியில் காந்தியவாதி ஆவது மாதிரியான கதை. பாரதியார் விழாவுடன் தொடங்கும் படம் காந்தியின் பிறந்த நாளுடன் முடியும், பாரதியாரின் எழுச்சி மிகுந்த பாடல்கள், தேசப்பற்று மிக்க உரையாடல்கள் மூலம் சுதந்ததிரமடைவதற்கு முன்பே சுதந்திரத்தை கொண்டாடிய படம்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!