
வனிதா அசிங்கமாக பேசினார்: நகுல் குற்றச்சாட்டு
ஆக 01, 2021
Advertisement
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பிரச்சனை செய்த நடிகை வனிதா, நடுவர்களை பற்றி தகாத வார்த்தைகளில் பேசியதாக நகுல் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.
விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனையால் வனிதா விஜயகுமார் சமீபத்தில் வெளியேறினார். அதற்காக நடுவர்களை குற்றம் சாட்டி வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் நடுவர்களில் ஒருவரான நகுல் அளித்திருக்கும் பேட்டியில் வனிதாவை தகாத வார்த்தைகளை பேசியதாக குற்றம்சாட்டி உள்ளார்.
அதில் அவர், "இன்னும் நன்றாக ஆடி இருக்கலாம் என்று தான் நாங்கள் சொன்னோம். ஆனால் வனிதா தான் வேறு விதமாக பேசினார். நான்கு நிமிட பாடலில் அவர் இரண்டு நிமிடம் சும்மா அமர்ந்துகொண்டு இருந்தார், அதனால் அவர் ஆட தொடங்கும் போது அதிகம் எனர்ஜியுடன் அம்மன் போல ஆடுவார் என எதிர்பார்த்தோம். போட்டியில் ஒப்பிடாமல் எப்படி சொல்ல முடியும்.
நான் வீட்டுக்கு போன பிறகு வனிதா அசிங்கமாக பேசினார் என டீமில் இருப்பவர்கள் சொன்னார்கள். என்னை விடுங்கள், ரம்யா கிருஷ்ணனுக்கு எவ்ளோ பெயர் இருக்கிறது. அவரிடம் வனிதா மன்னிப்பு கேட்டே ஆகணும்". என நகுல் கூறியுள்ளார்.
விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனையால் வனிதா விஜயகுமார் சமீபத்தில் வெளியேறினார். அதற்காக நடுவர்களை குற்றம் சாட்டி வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் நடுவர்களில் ஒருவரான நகுல் அளித்திருக்கும் பேட்டியில் வனிதாவை தகாத வார்த்தைகளை பேசியதாக குற்றம்சாட்டி உள்ளார்.
அதில் அவர், "இன்னும் நன்றாக ஆடி இருக்கலாம் என்று தான் நாங்கள் சொன்னோம். ஆனால் வனிதா தான் வேறு விதமாக பேசினார். நான்கு நிமிட பாடலில் அவர் இரண்டு நிமிடம் சும்மா அமர்ந்துகொண்டு இருந்தார், அதனால் அவர் ஆட தொடங்கும் போது அதிகம் எனர்ஜியுடன் அம்மன் போல ஆடுவார் என எதிர்பார்த்தோம். போட்டியில் ஒப்பிடாமல் எப்படி சொல்ல முடியும்.
நான் வீட்டுக்கு போன பிறகு வனிதா அசிங்கமாக பேசினார் என டீமில் இருப்பவர்கள் சொன்னார்கள். என்னை விடுங்கள், ரம்யா கிருஷ்ணனுக்கு எவ்ளோ பெயர் இருக்கிறது. அவரிடம் வனிதா மன்னிப்பு கேட்டே ஆகணும்". என நகுல் கூறியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!