
கவர்ச்சி நடிகைக்கு அடி உதை : கணவர் கைது
நவ 10, 2021
Advertisement
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியவர். சமூகவலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சியான படங்களை பதிவிடும் இவர் அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.
தனது நீண்ட நாள் காதலர் சாம் பாம்பே என்பவரை கடந்த ஆண்டு இவர் திருமணம் செய்துகொண்டார். இருவரும் தேனிலவுக்காக கோவா சென்ற இடத்தில் தகராறில் ஈடுபட்டனர். கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக போலீசிலும் புகார் அளித்தார். பின்னர் இருவரும் சமாதானமாகி இணைந்தனர்.
இந்த நிலையில் பூனம் பாண்டே முகம் மற்றும் தலை, கண்களில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன் கணவர் சாம் பாம்பே தன்னை கொலை செய்யும் நோக்கில் தாக்கியதாக அவர் போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சாம் பாம்பே போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தனது நீண்ட நாள் காதலர் சாம் பாம்பே என்பவரை கடந்த ஆண்டு இவர் திருமணம் செய்துகொண்டார். இருவரும் தேனிலவுக்காக கோவா சென்ற இடத்தில் தகராறில் ஈடுபட்டனர். கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக போலீசிலும் புகார் அளித்தார். பின்னர் இருவரும் சமாதானமாகி இணைந்தனர்.
இந்த நிலையில் பூனம் பாண்டே முகம் மற்றும் தலை, கண்களில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன் கணவர் சாம் பாம்பே தன்னை கொலை செய்யும் நோக்கில் தாக்கியதாக அவர் போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சாம் பாம்பே போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!