பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

இந்த கொரோனா தாக்கத்தாலும் ஊரடங்காலும் கடந்த ஒரு வருட காலாத்திற்கும் மேலாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலருக்கும் தனது சொந்த பணத்தில் இருந்து, பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறார் வில்லன் நடிகர் சோனு சூட். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாகவே மாறிவிட்ட சோனு சூட், சமீபத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு, 18வயதான தனது மூத்த மகன் இஷானுக்கு மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர காரை வாங்கி பரிசளித்ததாக தகவல் வெளியானது.
ஒருபக்கம் மக்களின் உதவிகளுக்காக பணம் செலவிடும் சோனு சூட், இந்த சமயத்தில் இப்படி ஆடம்பரமாக செலவிடுவாரா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சோஷியல் மீடியாவிலும் இது எதிரொலித்தது. சோனு சூட்டின் கவனத்துக்கும் இந்த தகவல் வந்துள்ளது.
இதை தொடர்ந்து இதற்கு விளக்கம் அளித்துள்ள சோனு சூட், “அந்த விலை உயர்ந்த காரை நான் என் மகனுக்காக வாங்கவில்லை. சொல்லப்போனால் அந்த கார், சும்மா ட்ரையல் பாருங்களேன் என கூறி என் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. அவ்வளவுதான்.” என கூறி சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும், “தந்தையர் தினத்திற்கு நான் ஏன், என் மகனுக்கு பரிசு கொடுக்கவேண்டும்.? அவன் அல்லவா எனக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும்” என .நகைச்சுவையாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்..