சிரஞ்சீவியுடன் கவர்ச்சி ஆட்டம் போடும் மவுனி ராய் | படித்த கல்லூரியிலேயே பாடமானது மம்முட்டி வரலாறு | பிளாஷ்பேக்: ஜெய்சங்கர் வீட்டில் வேலை பார்த்த நடிகர் | பிளாஷ்பேக்: சினிமாவான துப்பறியும் நாவல் | பிரியதர்ஷன், அக்ஷய் குமார் படத்தில் விலகிய நடிகர் மீண்டும் இணைந்தார் | மம்முட்டியை விட கிரேஸ் ஆண்டனிக்கு கதை சொல்ல தான் அதிக நேரம் பிடித்தது : இயக்குனர் ராம் | இயக்குனர் ரஞ்சித் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை தள்ளுபடி செய்த கர்நாடக நீதிமன்றம் | பிரேமலு இயக்குனரின் படத்தில் இணைந்த நிவின்பாலி, மமிதா பைஜூ : பஹத் பாசில் தயாரிக்கிறார் | என் படத்திற்கு ‛ஜானகி' டைட்டிலை அனுமதித்த சென்சார், சுரேஷ்கோபி படத்தை எதிர்ப்பது ஏன்? இயக்குனர் ஆதங்கம் | சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி |
இந்த கொரோனா தாக்கத்தாலும் ஊரடங்காலும் கடந்த ஒரு வருட காலாத்திற்கும் மேலாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலருக்கும் தனது சொந்த பணத்தில் இருந்து, பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறார் வில்லன் நடிகர் சோனு சூட். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாகவே மாறிவிட்ட சோனு சூட், சமீபத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு, 18வயதான தனது மூத்த மகன் இஷானுக்கு மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர காரை வாங்கி பரிசளித்ததாக தகவல் வெளியானது.
ஒருபக்கம் மக்களின் உதவிகளுக்காக பணம் செலவிடும் சோனு சூட், இந்த சமயத்தில் இப்படி ஆடம்பரமாக செலவிடுவாரா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சோஷியல் மீடியாவிலும் இது எதிரொலித்தது. சோனு சூட்டின் கவனத்துக்கும் இந்த தகவல் வந்துள்ளது.
இதை தொடர்ந்து இதற்கு விளக்கம் அளித்துள்ள சோனு சூட், “அந்த விலை உயர்ந்த காரை நான் என் மகனுக்காக வாங்கவில்லை. சொல்லப்போனால் அந்த கார், சும்மா ட்ரையல் பாருங்களேன் என கூறி என் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. அவ்வளவுதான்.” என கூறி சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும், “தந்தையர் தினத்திற்கு நான் ஏன், என் மகனுக்கு பரிசு கொடுக்கவேண்டும்.? அவன் அல்லவா எனக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும்” என .நகைச்சுவையாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்..