காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.66 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! |
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டு மரணத்தை தழுவினார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலி ரியா சக்கரபோர்த்தி மீது சுஷாந்த் குடும்பத்தினரால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின் சுஷாந்துக்கு போதை மருந்து தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரியா சில வார சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் விடுதலை ஆனார்.
இந்தநிலையில் நாளை (ஜன-21) சுஷாந்த்தின் பிறந்தநாள் வருகிறது. தற்போதே டிவிட்டரில் சுஷாந்த் பற்றிய ஹேஷ்டேக்குள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன. இதையடுத்து சுஷாந்துக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்காக சாலையோர பூக்கடையில் பூங்கொத்து வாங்குவதற்காக காரில் வந்து இறங்கினார் ரியா. அவர் மாஸ்க் அணிந்திருந்தாலும் அவரை கண்டுகொண்ட சில ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து கேள்விகளை எழுப்பியபடியே வந்தனர். அவர்களிடம் தன்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சும் விதமாக கையெடுத்து கும்பிட்ட ரியா சக்கரபோர்த்தி, தான் வந்த காரில் ஏறி அங்கிருந்து சென்றார்.