'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி |

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டு மரணத்தை தழுவினார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலி ரியா சக்கரபோர்த்தி மீது சுஷாந்த் குடும்பத்தினரால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின் சுஷாந்துக்கு போதை மருந்து தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரியா சில வார சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் விடுதலை ஆனார்.
இந்தநிலையில் நாளை (ஜன-21) சுஷாந்த்தின் பிறந்தநாள் வருகிறது. தற்போதே டிவிட்டரில் சுஷாந்த் பற்றிய ஹேஷ்டேக்குள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன. இதையடுத்து சுஷாந்துக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்காக சாலையோர பூக்கடையில் பூங்கொத்து வாங்குவதற்காக காரில் வந்து இறங்கினார் ரியா. அவர் மாஸ்க் அணிந்திருந்தாலும் அவரை கண்டுகொண்ட சில ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து கேள்விகளை எழுப்பியபடியே வந்தனர். அவர்களிடம் தன்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சும் விதமாக கையெடுத்து கும்பிட்ட ரியா சக்கரபோர்த்தி, தான் வந்த காரில் ஏறி அங்கிருந்து சென்றார்.