தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டு மரணத்தை தழுவினார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலி ரியா சக்கரபோர்த்தி மீது சுஷாந்த் குடும்பத்தினரால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின் சுஷாந்துக்கு போதை மருந்து தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரியா சில வார சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் விடுதலை ஆனார்.
இந்தநிலையில் நாளை (ஜன-21) சுஷாந்த்தின் பிறந்தநாள் வருகிறது. தற்போதே டிவிட்டரில் சுஷாந்த் பற்றிய ஹேஷ்டேக்குள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன. இதையடுத்து சுஷாந்துக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்காக சாலையோர பூக்கடையில் பூங்கொத்து வாங்குவதற்காக காரில் வந்து இறங்கினார் ரியா. அவர் மாஸ்க் அணிந்திருந்தாலும் அவரை கண்டுகொண்ட சில ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து கேள்விகளை எழுப்பியபடியே வந்தனர். அவர்களிடம் தன்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சும் விதமாக கையெடுத்து கும்பிட்ட ரியா சக்கரபோர்த்தி, தான் வந்த காரில் ஏறி அங்கிருந்து சென்றார்.