ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் வெளிநாட்டு கார் ஒன்றை 55 லட்சத்துக்கு வாங்கினார். இந்த காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த வகையில் வரிஏய்ப்பு செய்ததாக அவர் மீது சுங்க இலாகா துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் சுஷ்மிதா தான் பழைய கார் என்று நினைத்தே அதை வாங்கியதாகவும் அதில் வரி ஏய்ப்பு நடந்தது தனக்கு தெரியாது என்றும் கூறினார். காருக்கு வரியாக 20 லட்சம் ரூபாயும் கட்டினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமும் அளித்தார். தான் வரி கட்டிவிட்டதால் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறும் தனக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து செய்யுமாறும் சுஷ்மிதா சென் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதனை ஏற்று நீதிமன்றம் பிடிவாரண்ட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து மத்திய புலனாய்வுத்துறை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம். எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவு சரியே என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.