கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
முன்னாள் உலக அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் வெளிநாட்டு கார் ஒன்றை 55 லட்சத்துக்கு வாங்கினார். இந்த காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த வகையில் வரிஏய்ப்பு செய்ததாக அவர் மீது சுங்க இலாகா துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் சுஷ்மிதா தான் பழைய கார் என்று நினைத்தே அதை வாங்கியதாகவும் அதில் வரி ஏய்ப்பு நடந்தது தனக்கு தெரியாது என்றும் கூறினார். காருக்கு வரியாக 20 லட்சம் ரூபாயும் கட்டினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமும் அளித்தார். தான் வரி கட்டிவிட்டதால் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறும் தனக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து செய்யுமாறும் சுஷ்மிதா சென் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதனை ஏற்று நீதிமன்றம் பிடிவாரண்ட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து மத்திய புலனாய்வுத்துறை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம். எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவு சரியே என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.