ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

ஹாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது 'பேட்டில் ஆப் கல்வான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். அபூர்வ லக்கியா என்பவர் இயக்கி வருகின்ற இந்த படத்தின் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து இவர்களுக்கிடையே கடந்த மூன்று மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக இவர்கள் சொன்ன கதை சல்மான் கானுக்கு ரொம்பவே பிடித்து விட்டதாம். அதாவது சினிமாவில் சூப்பர் ஹீரோவாக இருக்கும் ஒருவர் அது போரடித்து போய் அதை விட்டு ஒதுங்கி ஓய்வு பெற நினைக்கிறார். ஆனால் காலம் அவரை மீண்டும் அதே கதாபாத்திரங்களை செய்யும்படி இழுத்து வருகிறதாம். காமெடி மற்றும் ஆக்சன் கலந்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறார்களாம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




