நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'கேரளா ஸ்டோரி' படம் பரபரப்பை கிளப்பியது. கேரளாவில் உள்ள இளம்பெண்கள் வேலை வாய்ப்புக்காக அரபு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்கள் முஸ்லீம் தீவிரவாதிகளாக மாற்றப்படுவதாக அந்த படத்தில் சொல்லப்பட்டது. அந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் வெளியாகவில்லை. சில மாநிலங்கள் வரி விலக்கு கொடுத்து வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இதில் இந்து பெண்கள் கட்டாய காதலுக்கு உட்படுத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்படுவதாக கதை அமைந்துள்ளது. படத்தின் டீசரிலும் இது வெளியானது. இதை தொடர்ந்து இந்தப் படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்யக்கோரி கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூதிரி என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில் “எந்த மதத்தையோ, மாநிலத்தையோ அவமதிக்கும் வகையில் படத்தில் காட்சிகள் இடம் பெறவில்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கேரளா ஸ்டோரி 2 படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டனர்.