Advertisement

சிறப்புச்செய்திகள்

காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

என் சினிமா வாழ்க்கையே முடிந்தது என நினைத்தேன் ; அக்ஷய் குமார் வெளியிட்ட அதிர்ச்சி தருணம்

16 பிப், 2026 - 11:24 IST
எழுத்தின் அளவு:
I-thought-my-film-career-was-over-Akshay-Kumar-reveals-shocking-moment
Advertisement


பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தொடர்ந்து வருடத்திற்கு மூன்று நான்கு படங்களை கொடுத்தாலும் மீண்டும் ஒரு ஹிட் படத்தை கொடுக்க போராடி வருகிறார். இன்னொரு பக்கம் படங்களைத் தாண்டி வீல் ஆப் பார்ச்சூன் என்கிற ரியாலிட்டி ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார் அக்ஷய் குமார். இந்த நிலையில் சமீபத்திய இதன் எபிசோடு ஒன்றில் அவரிடம் உங்களை ரொம்பவே நிலைகுலைய வைத்த தருணம் எது என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அக்ஷய் குமார் பேசும்போது, “பல வருடங்களுக்கு முன்பு எனது நண்பனுடன் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டேன். அப்போது நண்பனுக்கும் இன்னொரு நபருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. எதிரில் இருந்த நபர் என்னுடைய நண்பரை தொடர்ந்து தவறான வார்த்தைகளால் குற்றம் சாட்டி வந்தார். நான் ஒவ்வொரு முறையும் குறுக்கிட்டு அப்படி பேசாதீர்கள் என்று தடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர் அப்படி பேசுவதை நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அவரை ஓங்கி அறைந்து விட்டேன்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கீழே விழுந்த அந்த நபர் மூர்ச்சையாகி விட்டார். நாங்கள் எல்லோரும் அதிர்ந்து போனோம். அவ்வளவுதான் என்னுடைய சினிமா வாழ்க்கையை இனி முடிந்து போனது என்பது போல நிலைகுலைந்து போனேன். பின்னர் கொஞ்சம் தண்ணீரை அவரது முகத்தில் தெளித்தபோது கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு சுய நினைவு மீண்டும் திரும்பியதும் தான் நிம்மதி பெருமூச்சு விட்டேன். இப்போதைய சூழல் என்றால் இந்த விஷயத்தை நான் மிகவும் எளிதாக கையாண்டிருப்பேன். அல்லது கடந்து சென்றிருப்பேன்” என்று கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் ... விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap