காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் 'துரந்தர்'. ஆதித்யா தார் இயக்கிய இந்த படம் 1300 கோடி வரை வசூலித்தது. அதோடு இப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி உள்ளது. வருகிற மார்ச் 19ம் தேதி இப்படம் வெளியாகிறது.
இந்த நிலையில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர் இந்த 'துரந்தர்' படம் குறித்து வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ''சமீப காலங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் துரந்தர் முக்கியமானது. இந்த படத்தை நான் இரண்டு முறை பார்த்து உள்ளேன். படத்தில் ஒவ்வொரு நடிகரும் தங்களது 100 சதவீத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். கதையை பெரிய அளவில் முன்னோக்கி எடுத்துச் சொல்லும் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கும் ஆவலுடன் நான் காத்திருக்கிறேன்'' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், அனிமல் படத்தின் ஹிட்டுக்கு பிறகு தற்போது ஹிந்தியில் தயாராகி வரும் 'ராமாயணா' படத்தின் இரண்டு பாகங்களிலும் ராமன் வேடத்தில் நடித்து வருகிறார் ரன்பீர் கபூர்.




