பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

பிரபல பாலிவுட் நடிகர் ராம்பால் பற்றிய செய்திதான் கடந்த சில தினங்களாகவே பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம் நடிகர் ராம்பால் கடந்த 2010ல் ஆட்டா பாட்டா லாபாட்டா என்கிற படத்தை தயாரித்து இயக்கினார். இதற்காக அவர் பைனான்சியர் ஒருவரிடம் ஐந்து கோடி கடன் வாங்கி இருந்தார். அந்த படம் சரியாக போகாத நிலையில் வட்டியுடன் சேர்த்து 9 கோடி ரூபாய் திரும்ப செலுத்த வேண்டிய நிலையில் அவர் பைனான்சியருக்கு கொடுத்த காசோலை பணம் இன்றி திரும்பியது.
இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பெயரில் ராம்பால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் உதவிக்கரம் நீட்ட முன் வந்துள்ளனர். இந்த நிலையில் மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் ராம்பாலுக்கு தன்னால் இயன்ற வகையில் பொருளாதார உதவியை ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி பாலிவுட்டில் பிரியதர்ஷன் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் ராம்பால் தான் வில்லனாக ஒப்பந்தம் செய்திருந்தார்.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரிடம் ராம்பாலுக்கு ஏற்கனவே பேசப்பட்ட சம்பளத்தை விட அதிகமான தொகையை சம்பளமாக தர வேண்டும் என்றும் அது அவரது கடன் பிரச்சினையை ஓரளவு சமாளிக்க உதவும் என்றும் கோரிக்கை வைத்தார் பிரியதர்ஷன். இந்த கோரிக்கையை தயாரிப்பாளரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இது குறித்து இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது, “எனக்கு ராம்பால் யாதவை 20 வருடங்களாக நன்றாகவே தெரியும். அவர் ஒரு நல்ல மனிதர். அவரது போதிய கல்வி அறிவின்மை காரணமாகத்தான் இந்த சிக்கலில் தெரியாமல் மாட்டிக் கொண்டார். அவர் சிறையில் இருந்து மீண்டு வர, அவரது கடனை அடைக்க இயன்ற உதவியை செய்வோம்” என்று கூறியுள்ளார்.




