காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

பாலிவுட்டின் பிரபல நட்சத்திர ஜோடி அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய். காதல் திருமணம் புரிந்த இவர்களுக்கு 15 வயதில் மகள் இருக்கிறார். அபிஷேக், ஐஸ்வர்யா பற்றி கடந்த சில வருடங்களாகவே அடிக்கடி பிரிவு என்ற கிசுகிசு வருவதும் பின்னர் அது அடங்கிப் போவதும் வழக்கமாக உள்ளது. சமீபத்தில் கூட இவர்கள் குடும்பமாக வெளியில் சென்ற புகைப்படங்கள் வெளிவந்து அந்த கிசுகிசுக்களுக்கு பதிலளிப்பதாக இருந்தது.
அபிஷேக் பச்சனுக்கு நேற்று 50வது பிறந்தநாள். அதற்காக அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அவரது வாழ்த்தில், “அன்புள்ள பாபி-பாப்பாவுக்கு இனிய 50வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும், மனநிறைவும், நல்ல ஆரோக்கியமும் நிறையட்டும். கடவுள் ஆசீர்வதிக்கட்டும், எப்போதும் பொலிவுடன் இருங்கள்... பிரகாசியுங்கள் அன்பே....,” என வாழ்த்தியுள்ளார்.




