'29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் |

ஹிந்தியில் கடந்த 2006ல் ஷாருக்கான் நடிப்பில் பர்ஹான் அக்தர் இயக்கத்தில் வெளியான படம் 'டான்'. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் இதே பர்ஹான் அக்தர், ஷாருக்கான் கூட்டணியில் கடந்த 2011ல் 'டான் 2' என்கிற பெயரில் வெளியானது. இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது இதன் மூன்றாம் பாகத்தை உருவாக்கும் வேலைகளில் இறங்கினார் இயக்குனர் பர்ஹான் அக்தர்.
இதற்காக தான் ஏற்கனவே கையில் எடுத்திருந்த பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப் மற்றும் ஆலியா பட் நடிக்க இருந்த 'ஜி லீ ஜாரா' படத்தையும் கிடப்பில் போட்டு விட்டார். அதேசமயம் 'டான் 3' படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் ரன்வீர் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார் பர்ஹான் அக்தர். ஆனால் சமீபத்தில் வெளியான துரந்தர் படத்தின் வெற்றி ரன்வீர் சிங்கின் போக்கையே மாற்றிவிட்டது.
அவர் திடீரென இந்த டான் 3 திரைப்படத்திலிருந்து வெளியேறி விட்டார். இந்த படத்திற்கு ரன்வீர் சிங் மிகப்பெரிய பலம் என நினைத்த பர்ஹான் அக்தர் தற்போது அவர் வெளியேறி விட்டதால் 'டான் 3' திரைப்படத்தை ஓரம் கட்டி வைத்துவிட்டு, ஏற்கனவே கிடப்பில் போடப்பட்டிருந்த பிரியங்கா சோப்ராவின் 'ஜி லீ ஜாரா' படத்தை மீண்டும் துவங்க திட்டமிட்டுள்ளாராம்.