இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

சன்னி தியோல், வருண் தவான் நடிப்பில் உருவான பார்டர் 2 திரைப்படம் நேற்று வெளியானது. அனுராக் சிங் இயக்கத்தில் ராணுவ பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் நேற்று வெளியான முதல் நாளே இந்திய அளவில் 32 கோடி வசூலித்து உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த மாதம் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் முதல் நாளன்று இந்தியாவில் 28 கோடி வசூலித்து இருந்தது. அதை பார்டர் 2 முறியடித்துள்ளது.
அதே சமயம் துரந்தர் படத்திற்கான வசூல் அடுத்தடுத்த நாட்களில் கூடவே செய்தது. அதனால் கிட்டத்தட்ட 1300 கோடி வசூலித்து தற்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுபோன்ற ஒரு சாதனையை பார்டர் 2 செய்யுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே சமயம் கடந்த 2023 ல் வெளியான கடார் படத்தை தொடர்ந்து சன்னி தியோலுக்கு இந்தப் படமும் ஒரு மாபெரும் வசூல் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.