ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

பாலிவுட் நடிகை நோரா பதேஹி தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை அதிக அளவில் பெற்று வருபவர். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர்-2வில் ஒரு பாடலுக்கு இவர் நடனமாடி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மும்பையில் பிரபல பாடகர் ஒருவரின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த கார் ஒன்று இவரது காரில் மோதியதில் காரில் இருந்து வெளியே விழுந்தார் நோரா பதேஹி. மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர் தற்போது தான் நலமாக இருப்பதாக கூறியுள்ளார்.
எதிரில் குடித்துவிட்டு கார் ஓட்டி வந்த டிரைவரின் செயலால் இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறியுள்ள நோரா பதேஹி அதனால் தான் நான் எல்லோரிடமும் மது அருந்த வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறேன். மதுவை நான் அடியோடு வெறுக்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த விபத்தை தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி, அந்த விழாவில் சென்று கலந்து கொண்டார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.