ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? |

ஆதித்ய தர் இயக்கத்தில், ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்ஷக் கண்ணா, மாதவன், சாரா அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் டிசம்பர் 5ம் தேதி வெளியான ஹிந்திப் படம் 'துரந்தர்'. இப்படம் நான்கு நாட்களில் நிகர வசூலாக 130 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ரன்வீர் சிங்கின் முந்தைய பட வசூல் சாதனையை முறியடித்துள்ளதாம்.
இந்த ஆண்டில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த ஹிந்திப் படமான 'சாயாரா' 31 கோடியைப் பெற்றது. 'துரந்தர்' 28 கோடியைப் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. 26/11 தீவிரவாத தாக்குதல்களுக்குப் பிறகு இந்திய ஏஜென்ட் ஆன ரன்வீர் சிங் பாகிஸ்தானுக்குள் நுழைந்து என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதைச் சுருக்கம்.
இந்தப் படத்தின் மூலம் ஹிந்தியில் நாயகியாக அறிமுகமாகி இருப்பவர் சாரா அர்ஜுன். தமிழில் 'தெய்வத் திருமகள், சைவம்' படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். 'துரந்தர்' படத்தில் ரன்வீர் சிங், சாரா சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் வந்த போது இந்த ஜோடியின் வயது வித்தியாசம் குறித்து சர்ச்சை எழுந்தது. ஆனால், படம் வெளிவந்த பிறகு அது மறைந்து போனது.
மேலும், இப்படத்தின் ஓடிடி உரிமையை 130 கோடிக்கு நெட்பிளிக்ஸ் பெற்றுதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. ரன்வீர் சிங்கின் படம் ஒன்று இந்த அளவிற்கு ஓடிடி உரிமைக்கு விற்கப்பட்டுள்ளதும் இதுவே முதல் முறை. வருடக் கடைசியில் ஒரு ஹிட் படம் வந்துள்ளதால் பாலிவுட்டினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.