நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் | சூர்யாவிற்கு ஜோடியாக நஸ்ரியா! | தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை? | தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை திருப்பிய கார்த்திக் சுப்பராஜ்! | கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம்! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா |
சில மாதங்களுக்கு முன்பு கன்னட நடிகை ரன்யா ராவ் என்பவர் தொடர்ந்து துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலமாக அடிக்கடி தங்கம் கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த வாகா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தவர். அது மட்டுமல்ல கர்நாடக டிஜிபி ராமச்சந்திர ராவ் என்பவரின் வளர்ப்பு மகளும் கூட. அந்த துணிச்சலில் தான் இவர் இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிய வந்தது.. பலமுறை ஜாமினுக்கு விண்ணப்பித்தும் அவை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார் ரன்யா ராவ்.
இந்த நிலையில் வருவாய் புலனாய்வு இயக்குனரகம், நடிகை ரன்யா ராவ் தொடர்ந்து துபாயில் இருந்து சுமார் 127.3 கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளார் என்று குறிப்பிட்டு அதற்காக அவருக்கு 102.55 கோடி அபராத தொகையாக விதித்துள்ளது. அபராத தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்ட தவறினால் ரன்யா ராவுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல இந்த தங்க கடத்தலில் ரன்யா ராவின் கூட்டாளிகளாக இணைந்து செயல்பட்ட குண்டூர் ராஜுவுக்கு 67.6 கிலோ தங்கம் கடத்தியதற்காக 62 கோடி அபராத தொகையும் சஹில் ஜெயின் என்பவருக்கு 63.61 கிலோ தங்கம் கடத்தியதற்காக 53 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.