எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் |

சில மாதங்களுக்கு முன்பு கன்னட நடிகை ரன்யா ராவ் என்பவர் தொடர்ந்து துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலமாக அடிக்கடி தங்கம் கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த வாகா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தவர். அது மட்டுமல்ல கர்நாடக டிஜிபி ராமச்சந்திர ராவ் என்பவரின் வளர்ப்பு மகளும் கூட. அந்த துணிச்சலில் தான் இவர் இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிய வந்தது.. பலமுறை ஜாமினுக்கு விண்ணப்பித்தும் அவை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார் ரன்யா ராவ்.
இந்த நிலையில் வருவாய் புலனாய்வு இயக்குனரகம், நடிகை ரன்யா ராவ் தொடர்ந்து துபாயில் இருந்து சுமார் 127.3 கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளார் என்று குறிப்பிட்டு அதற்காக அவருக்கு 102.55 கோடி அபராத தொகையாக விதித்துள்ளது. அபராத தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்ட தவறினால் ரன்யா ராவுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல இந்த தங்க கடத்தலில் ரன்யா ராவின் கூட்டாளிகளாக இணைந்து செயல்பட்ட குண்டூர் ராஜுவுக்கு 67.6 கிலோ தங்கம் கடத்தியதற்காக 62 கோடி அபராத தொகையும் சஹில் ஜெயின் என்பவருக்கு 63.61 கிலோ தங்கம் கடத்தியதற்காக 53 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.