Advertisement

சிறப்புச்செய்திகள்

ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி

17 ஜூலை, 2025 - 01:34 IST
எழுத்தின் அளவு:
Respect-for-police-has-increased-Tridha-Chowdhury
Advertisement

‛ஆஷ்ரம்' வெப்சீரிஸ் புகழ் நடிகை திரிதா சவுத்ரி தற்போது படங்களிலும் பிஸியாக நடிக்கிறார். அவர் நடித்துள்ள சஸ்பென்ஸ், திரில்லர் படமான ‛சோ லாங் வேலி', ஜூலை 25ல் தியேட்டர்களில் வெளியாகிறது. இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மான் சிங் இயக்கி உள்ளார். இந்த படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிராக உள்ளார். அவர் அளித்த பேட்டி...

போலீஸாக நடித்தது பற்றி அவர் கூறுகையில், ‛‛போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த பிறகு போலீஸ் மீதான மரியாதை இன்னும் அதிகரித்துள்ளது. ஏனெனில் அவர்கள் அனைவரும் நமக்காகவும், சமூகத்திற்காகவும் நிறைய உழைக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை எளிதானது அல்ல. அவர்கள் குடும்பத்துடன் அதிகநேரம் செலவிட முடிவது இல்லை. தங்களது கடமைக்காக நிஜ வாழ்க்கையில் நிறைய சமரசங்களை அவர்கள் செய்ய வேண்டி உள்ளது''.

பெண் போலீஸ் படம் குறித்து அவர் கூறும்போது, ‛‛நான் சமீபத்தில் கஜோலின் தோ பட்டி படம் பார்த்தேன், மிகவும் பிடித்திருந்தது. அதில் தனக்கு வரும் வழக்குகளை அவர் சிறப்பான முறையில் தீர்த்து வைத்தார்''.

'ஆஷ்ரம்' புகழ் நடிகை என்று அழைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த திரிதா, ‛‛இதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு மட்டுமல்ல, இதுபோன்று பல நடிகர்களுக்கும் நடக்கிறது. இதுதான் மக்களின் அன்பு என்று உணர்கிறேன். வரும் காலங்களில் வேறு படங்கள் அல்லது தொடர்களில் நடித்தால் அந்த படங்கள் அல்லது தொடரின் பெயரை குறிப்பிட்டு என்னை அழைக்கலாம் அல்லது அடையாளம் காணலாம் என்று நம்புகிறேன்''.

இவ்வாறு திரிதா கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்ததுநடிகை கியாரா அத்வானிக்கு பெண் ... ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap