எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் |

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்து வரும் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன. இதனால் எந்த மாதிரியான கதைகளில் நடிப்பது, எந்த மாதிரியான கேரக்டர்களில் நடிப்பது என்று அவருக்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் நடித்துள்ள 'ஹவுஸ்புல் 5' வெளிவந்துள்ளது. இதனால் படம் குறித்து ரசிகர்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக படம் வெளியான தியேட்டர்களுக்கு சென்று முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு மைக்கை பிடித்து படம் பார்த்து திரும்பும் ரசிகர்களிடம் ஒரு யு-டியூபரை போல படத்தை பற்றிய அபிப்ராயத்தை கேட்டுள்ளார்.
இதில் அக்ஷய் குமார் நல்ல நடிகர் ஆனால் கதை தேர்வில் ரொம்ப வீக், ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடிக்கிறார், ஆக்ஷன் படங்களை தவிர்த்து அழுத்தமான கதையம்சமுள்ள படங்களில் அவர் நடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருந்திருக்கிறது.