நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

மலையாள திரையுலகில் இயக்குனர் பிரியதர்ஷன், மோகன்லால் என்கிற எவர்கிரீன் கூட்டணியில் கடந்த 2016ம் வருடம் வெளியான படம் ஒப்பம். இந்த படத்தில் மோகன்லால் படம் முழுவதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தான் பணிபுரியும் வசதியான செல்வந்தர் வீட்டில் அனைவரும் பழைய பகை காரணமாக வில்லனால் ஒவ்வொருவராக பழிவாங்கப்பட, மீதி எஞ்சி இருக்கும் ஒரு குழந்தையை காப்பாற்ற கண் தெரியாத மோகன்லால் போராடுவதாக கதை உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் வில்லனாக நடிகர் சமுத்திரக்கனி நடித்திருந்தார். விறுவிறுப்பான கதையம்சத்துடன் உருவாகி இருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் வெளியாகி ஒன்பது வருடங்கள் கழித்து தற்போது ஹிந்தியில் இந்தப்படம் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இயக்குனர் பிரியதர்ஷனே இந்த படத்தை ஹிந்தியிலும் இயக்குகிறார். இதில் மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சைப் அலிகான் நடிக்க இருக்கிறார். இதுகுறித்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார். வில்லனாக பாபி தியோல் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.
விரைவில் இயக்குனர் பிரியதர்ஷன் தனது நூறாவது படத்தை மோகன்லாலை வைத்து இயக்க இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது, ஒருவேளை அந்த படத்தை முடித்துவிட்டு இதை இயக்குகிறாரா என்பது குறித்த விவரங்கள் இனிவரும் நாட்களில் தெரியவரும்.




