விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு |
மலையாள திரையுலகில் இயக்குனர் பிரியதர்ஷன், மோகன்லால் என்கிற எவர்கிரீன் கூட்டணியில் கடந்த 2016ம் வருடம் வெளியான படம் ஒப்பம். இந்த படத்தில் மோகன்லால் படம் முழுவதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தான் பணிபுரியும் வசதியான செல்வந்தர் வீட்டில் அனைவரும் பழைய பகை காரணமாக வில்லனால் ஒவ்வொருவராக பழிவாங்கப்பட, மீதி எஞ்சி இருக்கும் ஒரு குழந்தையை காப்பாற்ற கண் தெரியாத மோகன்லால் போராடுவதாக கதை உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் வில்லனாக நடிகர் சமுத்திரக்கனி நடித்திருந்தார். விறுவிறுப்பான கதையம்சத்துடன் உருவாகி இருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் வெளியாகி ஒன்பது வருடங்கள் கழித்து தற்போது ஹிந்தியில் இந்தப்படம் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இயக்குனர் பிரியதர்ஷனே இந்த படத்தை ஹிந்தியிலும் இயக்குகிறார். இதில் மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சைப் அலிகான் நடிக்க இருக்கிறார். இதுகுறித்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார். வில்லனாக பாபி தியோல் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.
விரைவில் இயக்குனர் பிரியதர்ஷன் தனது நூறாவது படத்தை மோகன்லாலை வைத்து இயக்க இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது, ஒருவேளை அந்த படத்தை முடித்துவிட்டு இதை இயக்குகிறாரா என்பது குறித்த விவரங்கள் இனிவரும் நாட்களில் தெரியவரும்.