எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் |

தமிழின் முன்னணி இயக்குனரான அட்லி, ஹிந்திக்குச் சென்று ஷாரூக்கான் ஹீரோவாக நடித்த 'ஜவான்' படத்தை இயக்கினார். அந்தப் படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
அந்தப் படத்திற்குப் பின்பு, சல்மான் கான் நடிக்க உள்ள படத்தை அட்லி இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அப்படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசனிடமும் பேச்சு வார்த்தை நடந்ததாகச் சொன்னார்கள். ஆனால், அப்படம் 'டேக் ஆப்' ஆகாமல் அப்படியே முடங்கிவிட்டது. அதன்பின் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க அட்லி இயக்க ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தை ஆரம்பமாகி முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் 'சிக்கந்தர்' படத்திற்கான பேட்டி ஒன்றில் பேசுகையில், “அட்லி ஒரு பெரிய பட்ஜெட் ஆக்ஷன் கதையை எழுதினார். பட்ஜெட்டின் காரணமாக படம் இப்போது தாமதம் ஆகியுள்ளது. படத்தில் இருக்கும் மற்ற நடிகர், நடிகையர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பெரிய கூட்டணிகள் நடக்க சரியான கதை தேவை. இப்போது நான் எனது அடுத்த படத்திற்குச் சென்றுவிட்டேன்,” என்று கூறியுள்ளார்.
அட்லி, அல்லு அர்ஜுன் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான ஏப்ரல் 8ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.