படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |
கடந்த 2020ம் ஆண்டு, இந்தியா, சீனா எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு வழியாக சுமார் 200 சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அருகில் உள்ள கிராமங்களை ஆக்கிரமிக்க முயற்சித்தனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் எதிர்த்து போராடினார்கள். இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 45க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் இறந்தனர். ஆயுதங்கள் எதுவும் இன்றி வெறும் கைகலப்பு, கல்வீசி தாக்கி நடந்த இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் சம்பவத்தை பிரபல பத்திரிகையாளர்களான சிஷ் அரூர், ராகுல் சிங் ஆகியோர் இணைந்து எழுதிய 'இண்டியாஸ் மோஸ்ட் பியர்லஸ்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புத்தகத்தை தழுவி திரைப்படமாக தயாரிக்கிறார்கள். இதற்கான உரிமையை இயக்குநர் அபூர்வா லாகியா பெற்றுள்ளார். அவரே இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இவர், 'ஏக் அஜ்னபி', 'மிஷன் இஸ்தான்புல்', 'ஜன்ஜீர்' உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். பான் இந்தியா முறையில் உருவாக இருக்கும் இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.