குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
கடந்த 2020ம் ஆண்டு, இந்தியா, சீனா எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு வழியாக சுமார் 200 சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அருகில் உள்ள கிராமங்களை ஆக்கிரமிக்க முயற்சித்தனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் எதிர்த்து போராடினார்கள். இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 45க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் இறந்தனர். ஆயுதங்கள் எதுவும் இன்றி வெறும் கைகலப்பு, கல்வீசி தாக்கி நடந்த இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் சம்பவத்தை பிரபல பத்திரிகையாளர்களான சிஷ் அரூர், ராகுல் சிங் ஆகியோர் இணைந்து எழுதிய 'இண்டியாஸ் மோஸ்ட் பியர்லஸ்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புத்தகத்தை தழுவி திரைப்படமாக தயாரிக்கிறார்கள். இதற்கான உரிமையை இயக்குநர் அபூர்வா லாகியா பெற்றுள்ளார். அவரே இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இவர், 'ஏக் அஜ்னபி', 'மிஷன் இஸ்தான்புல்', 'ஜன்ஜீர்' உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். பான் இந்தியா முறையில் உருவாக இருக்கும் இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.