பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் | கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது | மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை | துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2' | கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ |

பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் நடிக்க இருக்கிறார் என்பது ஆச்சர்யமான செய்தி. ஆனால் சிரஞ்சீவியின் நட்புக்காக தான், முதன்முறையாக அதிலும் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார் சல்மான் கான். ஆம், மலையாளத்தில் மோகன்லால் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற லூசிபர் திரைப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது.
இந்த படத்தில் சிரஞ்சீவியின் பாடிகார்டாக நடிக்கும் நபர் யார் என்கிற சஸ்பென்ஸ் நிலவி வந்தது. அதில் ராம்சரண் நடிப்பார் என்று சொல்லப்பட்டு வந்த வேளையில், யாரும் எதிர்பாராத விதமாக அந்த கதாப்பாத்திரத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.
தற்போது அவர் சிரஞ்சீவி உடன் காட்பாதர் படபிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இதற்கிடையே அவருக்கு இந்த படத்தில் சம்பளமாக கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, அதை பெற்றுக்கொள்ளுமாறு அவரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், தான் நட்புக்காக தான் நடிப்பதாகவும், அதனால் ஒரு பைசா கூட சம்பளம் வாங்கிக்கொள்ள மாட்டேன் என சல்மான் கான் மறுத்து விட்டதாகவும் தற்போது ஒரு தகவல் டோலிவுட் வட்டாரத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.