விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் நடிக்க இருக்கிறார் என்பது ஆச்சர்யமான செய்தி. ஆனால் சிரஞ்சீவியின் நட்புக்காக தான், முதன்முறையாக அதிலும் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார் சல்மான் கான். ஆம், மலையாளத்தில் மோகன்லால் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற லூசிபர் திரைப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. 
இந்த படத்தில் சிரஞ்சீவியின் பாடிகார்டாக நடிக்கும் நபர் யார் என்கிற சஸ்பென்ஸ் நிலவி வந்தது. அதில் ராம்சரண் நடிப்பார் என்று சொல்லப்பட்டு வந்த வேளையில், யாரும் எதிர்பாராத விதமாக அந்த கதாப்பாத்திரத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.
தற்போது அவர் சிரஞ்சீவி உடன் காட்பாதர் படபிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இதற்கிடையே அவருக்கு இந்த படத்தில் சம்பளமாக கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, அதை பெற்றுக்கொள்ளுமாறு அவரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், தான் நட்புக்காக தான் நடிப்பதாகவும், அதனால் ஒரு பைசா கூட சம்பளம் வாங்கிக்கொள்ள மாட்டேன் என சல்மான் கான் மறுத்து விட்டதாகவும் தற்போது ஒரு தகவல் டோலிவுட் வட்டாரத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 




