ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் நடிக்க இருக்கிறார் என்பது ஆச்சர்யமான செய்தி. ஆனால் சிரஞ்சீவியின் நட்புக்காக தான், முதன்முறையாக அதிலும் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார் சல்மான் கான். ஆம், மலையாளத்தில் மோகன்லால் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற லூசிபர் திரைப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது.
இந்த படத்தில் சிரஞ்சீவியின் பாடிகார்டாக நடிக்கும் நபர் யார் என்கிற சஸ்பென்ஸ் நிலவி வந்தது. அதில் ராம்சரண் நடிப்பார் என்று சொல்லப்பட்டு வந்த வேளையில், யாரும் எதிர்பாராத விதமாக அந்த கதாப்பாத்திரத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.
தற்போது அவர் சிரஞ்சீவி உடன் காட்பாதர் படபிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இதற்கிடையே அவருக்கு இந்த படத்தில் சம்பளமாக கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, அதை பெற்றுக்கொள்ளுமாறு அவரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், தான் நட்புக்காக தான் நடிப்பதாகவும், அதனால் ஒரு பைசா கூட சம்பளம் வாங்கிக்கொள்ள மாட்டேன் என சல்மான் கான் மறுத்து விட்டதாகவும் தற்போது ஒரு தகவல் டோலிவுட் வட்டாரத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.