விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். போதை மருந்து வழக்கிலும் தொடர்புடையவர். பாலிவுட் நடிகர் சல்மான்கானுடன் நெருக்கமாக இருக்கிறவர். தற்போது அவருக்கு பிரபல மோசடி மன்னன் சுகேசுக்கும் இருக்கும் நட்பும், தொடர்பும் வெளிவந்து கொண்டிருக்கிறது. சுகேசுடன், ஜாக்குலின் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளிவந்துள்ளது. அதோடு சுகேஷ் ஜாக்குலினுக்கு கோடி கணக்கில் பணம் கொடுத்திருப்பதும் வெளிவந்திருக்கிறது.
இந்த நிலையில் ஜாக்குலின் ரியாத்தில் நடக்கும் கலைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார். அவரை தடுத்து நிறுத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் உங்கள் மீது அமலாக்கத்துறை லுக்அவுட் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனால் நீங்கள் எந்த வெளிநாட்டுக்கும் போக முடியாது என்று கூறி திருப்பி அனுப்பினர். இதனால் ஏமாற்றத்துடன் திரும்பினார் ஜாக்குலின். சுகேஷ் சந்திரசேகரின் மோசடி வழக்குகளில் ஜாக்குலின் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.