மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் |

கடந்த காலங்களில் பாலிவுட், 'காஸ்டியூமர்'களை தனக்கு நியமித்து, அதற்கான பட கூலியை தயாரிப்பாளர்களை கொடுக்க வைத்து வந்தார், தாரா நடிகை. ஆனால், திருமணத்திற்கு பிறகு, தன், இரண்டு மகன்களையும் படப்பிடிப்பு தளங்களுக்கு அழைத்து செல்பவர், அன்றைய தினம் அவர்களுக்கான மொத்த செலவையும் தயாரிப்பாளர் தலையிலே கட்டுகிறார். மேலும், இரண்டு மகன்களையும் பராமரிக்க வரும் ஆயாக்களுக்கும் தயாரிப்பாளர்களையே சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கெடுபிடி செய்கிறார்.
இதனால், 'இவருக்கே பல கோடிகள் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும் நிலையில், 'எக்ஸ்ட்ரா' இன்னும் சில கோடிகளை கொடுக்க வேண்டியதிருக்கே...' என, தாரா நடிகையை வைத்து படம் தயாரிப்பவர்கள் புலம்பி தள்ளுகின்றனர்.