Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

ஓ மை கடவுளே... சாரா... ஜோரா...

13 அக், 2024 - 12:30 IST
எழுத்தின் அளவு:
Actor-Shara-special-interview

மாநகரத்தில் அறிமுகமாகி சமீபத்தில் வெளியான போட் வரையிலான படங்களில் தனக்கென ஒரு பாணியில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் காமெடி நடிகர் சாரா. தமிழில் இரண்டு, மலையாளத்தில் ஒரு படத்தில் தீவிரமாக நடித்து கொண்டிருந்தவரிடம் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசினோம். இனி அவரே தொடர்கிறார்...

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தான் பூர்வீகம். அப்பா ராஜேந்திரன் துணை கலெக்டராக பணிபுரிந்ததால் புதுக்கோட்டையில் பள்ளிப்படிப்பை முடித்தேன். இயல்பாகவே ஹியூமர்சென்ஸ் எனக்கு உண்டு. வீட்டில் நான் இருந்தால் கலகலப்பாக இருக்கும் என பெற்றோர் கூறுவர். தனியாக யுடியூப் சேனல் துவக்கி மக்களை மகிழ்விக்க வேண்டும் என முயற்சி செய்தேன். இதெல்லாம் அப்பாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் வீட்டில் எப்போதும் தகராறு தான்.

சினிமாவில் சும்மா முன்னேறி விட முடியாது. ரொம்ப கஷ்டபட வேண்டியிருக்கும். ஆயிரத்தில் ஒருவர் தான் ஜெயிக்க முடியும் என அப்பா தெரிவித்த போது நான் தான் அந்த ஆயிரத்தில் ஒருவன் என்பேன். இதனால் சென்னையில் விஸ்காம் சேர்ந்தேன். அங்கு என்னுடன் பயின்ற பலரும் தற்போது பிரபல யுடியூபர்களாக, சினிமா பிரபலங்களாக உள்ளனர். விஸ்காம் முடித்த கையுடன் மும்பையில் எப்.எம்., ஒன்றில் ரேடியோ ஜாக்கியாக பணியை துவங்கினேன். பிறகு ஆர்ட் டைரக்டர் ஒருவரிடம் உதவியாளராக சேர்ந்தேன். நண்பர் விஜய் வரதராஜூடன் இணைந்து டெம்பிள் மங்கிஸ் யூடியூப் சேனல் துவங்கினோம். அப்போது ஹிப்ஹாப் தமிழா ஆதி உள்ளிட்டோரின் நட்பு கிடைத்தது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தை இயக்கியபோது என் நண்பரை அந்த படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் நண்பரோ அந்த வாய்ப்பை என்னிடம் தள்ளி விட்டார். இப்படி தான் மாநகரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த 'மீசையை முறுக்கு' படத்தில் சூரி நடிப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு படங்களில் அவர் பிசியாக இருந்ததால் அவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.

பிறகு காமெடி டிராக் பகுதிக்காக ஒரு நாள் மட்டும் நடிக்கும்படி என்னை ஹிப் ஹாப் தமிழா ஆதி அழைத்தார். நான் நடித்த புட்டேஜை பார்த்த இயக்குனர் சுந்தர்.சி, படம் முழுதும் நடிக்கட்டும் என வாய்ப்பு அளித்தார். அந்த நிலையில் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் எனக்கு பெரிய பிரேக் பெற்று கொடுத்தது. அதையடுத்து கோமாளி, ஓ மை கடவுளே, போட் என பல வாய்ப்புகள் கிடைத்தன. எந்த கேரக்டர் கிடைத்தாலும் நடிக்க ஆசை தான். ஆனால் காமெடியனாக நடிக்க தான் வாய்ப்பு வருகிறது.

என்னை பொருத்தவரை மறைந்த நடிகர் ரகுவரன் ஆக்டிங் பிடிக்கும். சமீபத்தில் பார்த்த ஜமா, வாழை, லப்பர்பந்து படங்கள் ரொம்ப இம்ப்ரஸ் பண்ணி விட்டன. சினிமாவை மட்டுமே நம்பி சில இளைஞர்கள் வருகின்றனர். வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் அவர்கள் நிலை கஷ்டமாகி விடுகிறது. எனவே ஏதாவது ஒரு தொழில் கையில் வைத்து கொண்டு சினிமா வாய்ப்பு தேடினால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எப்போதும் நடிப்பில் இனியவள் பாடினிஎப்போதும் நடிப்பில் இனியவள் பாடினி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in