நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
பிரபல சின்னத்திரை நடிகை சரண்யா துராடி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்கிற நிகழ்ச்சியில் நடனமாடி அசத்தி வருகிறார். அதில், அண்மையில் ஒளிபரப்பான எபிசோடில் நாய்க்குட்டி போல் வேடமணிந்து நடனமாடியிருக்கிறார். முதலில் இது எளிதாக இருக்கும் என்று நினைத்த சரண்யாவுக்கு பயிற்சியின் போதே முட்டியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு ரத்தம் கசியும் அளவுக்கு வந்துள்ளதாம்.
இந்த அனுபவம் குறித்து மிகவும் உருக்கத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சரண்யா, '5வது நாள் ஸ்டேஜ் பெர்பார்மன்ஸின் போது நாங்கள் எலிமினேட் ஆகிவிடுவோம்னு நினைச்சோம். அடுத்த 5 நிமிஷத்துக்கு முட்டின்னு ஒன்னு இல்லைன்னு நினைச்சிட்டு ஒரு நாய்க்குட்டியாவே மனசார நம்பி ஆடினேன். ஆடி முடிச்சு எழுந்து நின்னு பார்த்தா போட்டியாளர்கள், பார்வையாளர்கள் எழுந்து நின்னு கைத்தட்டுனாங்க. மாஸ்டர் கண்ணுல கண்ணீர். அன்னைக்கு கோல்டர் பெர்பார்மன்ஸ் ஜெயிச்சோம்' என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். சரண்யாவின் இந்த அர்ப்பணிப்பான நடனத்தை ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.