மகளுக்கு திருமணம் : பிரதமருக்கு அழைப்பு விடுத்த குஷ்பு, சுந்தர் சி | ரூ.400 கோடி நஷ்ட ஈடு கேட்டு 'காப்பிரைட்' வழக்கு | சூர்யாவின் முதல் 300 கோடி, அப்படியே தொடர்வாரா...? | நடிகர் அஜித்தின் தாயார் காலமானார் | பாலிவுட்டில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பூஜா ஹெக்டே? | 'கருப்பு' வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர் | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள் | மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்! | விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன் : அமைச்சர் ராஜ்மோகன் |

ராஜா ராணி 2 தொடரில் கடந்த ஒருவருடமாக ஹீரோயினாக நடித்து வந்த ரியா விஸ்வநாத் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளார். அவரே விலகினாரா? அல்லது வெளியேற்றப்பட்டாரா? என நேயர்கள் பலரும் குழம்பியுள்ளனர். அதேசமயம் ரியாவுக்கு பதில் யார் புதிய சந்தியாவாக நடிக்க போகிறார் எனவும் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், பலருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் ஆஷா கவுடா இனி சந்தியாவாக நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பான 'கோகுலத்தில் சீதை' தொடரின் மூலம் அறிமுகமான ஆஷா கவுடா அந்த தொடரில் நந்தா மாஸ்டருடன் சேர்ந்துகொண்டு 'ஊம் சொல்றியா மாமா' பாடலுக்கு செமயாக ஒரு குத்து குத்தியிருப்பார். அப்போதே இளைஞர் வட்டாரம் ஆஷா கவுடாவிடம் சரண்டராகிவிட்டது. கோகுலத்தில் சீதை தொடர் முடிவுற்ற நிலையில் ஆஷா கவுடா எந்த ஒரு தொடரிலும் கமிட்டாகவில்லை. தற்போது அவர் சந்தியாவாக ரீ-எண்ட்ரி கொடுத்திருப்பதால் அவரது ரசிகர்கள் இதை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.